Posts

Showing posts from 2014

மகனுக்கு கடிதம் - மரப்பாச்சி பொம்மை

Image
அன்புள்ள கவின் பாரதிக்கு, உன் அப்பா எழுதுகிறேன். இன்னும் பிறக்காத அல்லது தத்தெடுக்கபடாத குழந்தைகளின் உடல்நலம் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு தந்தையின் மொழியில் இந்த கடிதம் மரபாச்சி பொம்மைகள் குறித்து உன்னோடு பேசிக் கொண்டிருக்கும். பல்லாயிரமாண்டு மரபின் நீட்சியை தொலைத்த சமூகத்தின் கதையிது. பக்குவத்தோடு இக்கடிதத்தை படிக்கும் பருவம் உனக்கு வரும் பொழுது இதன் அழுத்தம் அறிவாய். புற்று நோய் தொடங்கி நேற்றுவரை நம் தமிழ்ச்சமூகம் கண்டிராத புது புது நோய்களை பரப்பிக் கொண்டிருக்கும் நெகிழி (பிளாஸ்டிக்) பொம்மைகளை உன் இதழ்கள் சுவைத்து விடலாம். அதன் கொடிய நெடியை நீ முகர்ந்துவிடலாம், எல்லாவற்றுக்கும் மேல் நம்மை தாங்கும் தாய் மண்ணிற்கு இது தகாத விளைவை தருமட கண்ணே! அந்த அச்சம் கூட இந்த கடிதத்தை எழுத காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிலிட்டு உரசி நெற்றியில் தேய்க்கும் வழக்கும் நம் மரபில் உண்டு. அப்பேற்பட்ட மருத்துவ குணம் மற்றும் மனிதம் மீது நேசம் நிறைந்தவை நமது மரபு வழி உற்பத்தி பொருட்கள். மரபாச்சி பொம்மைகளை நீ சுவைக்கலாம், கடிக்கலாம், முகரலாம், க...

நாணல் நண்பர்கள் குழுவின் கணக்கு விபரங்கள்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாணல் நண்பர்கள் குழு கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வருகிறது. களத்தில் செயல்படும் சுமார் 30 இளைஞர்களை கொண்டு மதுரையில் பாரம்பரியம், வாழ்வியல், சூழல், வேளாண்மை, வரலாறு, பல்லுயிரியம், தண்ணீர், குழந்தை கல்வி, மாற்று பாலினம் தொடர்பான விழிப்புணர்வு, பிரசுரம், கருத்தரங்கு, பொது நிகழ்வுகள், போராட்டங்கள் என செயல்பட்டு வருகிறோம். நாம் நடத்திய பல நிகழ்வுகள், போராட்டங்கள் பத்தில் இருந்து முப்பது ரூபாய்க்குள் முடிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்து, பேச்சு, வழி நடத்தும் பல தோழமை இயக்கங்கள், பெரியவர்கள், நண்பர்கள், முற்போக்கு சிந்தனை, எல்லாவற்றுக்கும் மேலான உழைப்பு இவைதான் நாம் இயங்குவதற்கு பொருளாதரத்தை விட பெரிதும் காரணமாக இருந்தது. அனுபவ குறைவால் அல்லது சரியான திட்டமிடல் இல்லாமல் பல நிகழ்வுகளை எதிர்நோக்கிய பாதைக்கு நகர்த்த முடியாமல் போயிருக்கிறது. பல நிகழ்வுகள், போராட்டங்கள் முற்போக்கான சமூக மாற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது என்று நம்புகிறோம். வாழ்க்கை முழுதும் வகுப்பறை நிரம்பி இருக்கிறது. வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் கற்று கொண்டே இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்...

மரபும் மரமும்

Image
தமிழக மன்னர்களில் பாண்டிய மன்னனே பழமையான மன்னன் என்பது எல்லோரும் அறிந்ததே. முதல் மற்றும் இடை சங்கங்கள் மட்டுமே 237 பாண்டிய மன்னர்களால் 8100 ஆண்டுகள் இயங்கின என்பது வரலாற்று செய்தி. அந்த வகையில் மன்னர்களின் சின்னங்கள் குறித்து நாம் அறிந்தது  வெகு சிலவே.சங்ககால மன்னர்கள் தாவரங்களை தங்கள் வாழ்வியலோடு இணைத்து பார்த்தனர்.  அதற்கு சான்றுகள் சில இங்கே... வேப்பமரமும் அதன் பூக்களும் பாண்டிய மன்னர்களின் சின்னம். ஆர் என்கிற அத்திப்பூ சோழ மன்னர்களின் சின்னம். போந்தை என்கிற பனைமரம் சேர மன்னர்களின் சின்னம். அரசமரம் தொண்டை மண்டில மன்னர்களின் சின்னங்களாக திகழ்ந்தன. இம்மண்ணின் மரங்கள் ஒவ்வொன்றும் நம் மரபோடும்,வாழ்வியலோடும் பிணைந்தவை. ஆனால் இந்த நகர மயமாக்கல் இந்த பிணைப்பை துண்டித்து விட்டது. பாண்டிய மன்னனின் சின்னத்தின் ஒன்றான வேப்பமரத்தின் காப்புரிமையை, பெறும் போராட்டத்திற்கு பின் சில மாதங்களுக்கு முன்பு தான் மீட்டெடுக்கப்பட்டது (வந்தன சிவா, நம்மாழ்வார் ஐயா ஆகியோர்களால்)  தி ஹிந்து நாளிதழ், மதுரை 18 ஜூன் 2014 நமது பாரம்பரியத்திற்க்கு காப்புரிமை கொண்டாட அவ...

தமிழ் பல்லுயிர் குடும்பம்

Image
குளம் குட்டையோடு கடம்பம், மருதம், இலுப்பை, பனை, வேங்கை, நாவல், மந்தாரை, கோவை கொடி, கத்தாளை என செடி, கொடி, மரம் சூழ்ந்திருந்த நம் பசுமை ஊர்களை சற்று திரும்பி பாருங்கள்..... நம்மோடு சுற்றி திரிந்த பிள்ளை பூச்சி, புழு, தவளை, தட்டான், வண்ணத்து பூச்சி, மின்மினி, பொன்வண்டு, முயல், நரி, ஓணான், கழுகு, பருந்து, குருவி என எதையும் காணவில்லை. இவ்வுயிர்களை காணும் வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு இருக்கிறதா? எத்தனை அழகிய சூழலை நாமும் நம் தலைமுறையும் இழந்திருக்கிறோம் பாருங்கள். தொலைந்து போன இவ்வுயிர்களை கண்டுபிடித்து தரும் கடமை காவல் நிலையங்களுக்கு இல்லை. அதற்க்கு இந்திய சட்டத்தில் இடமுமில்லை. பாரம்பரிய நேசத்தை இழந்து நிற்கும் நம்முடைய சுயநலமும் அலட்சியமும்தான் இந்நிலைக்கு காரணம். அடுத்து வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக இயங்கும் ஆளும் வர்க்கம். உலகில் உள்ள பல்லுயிர்களில் வெறும் 14 சதவீத உயிர்களை மட்டும்தான் இதுவரை நாம் கண்டறிந்து பெயர் வைத்திருக்கிறோம் என்றால் நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாத இயற்கை அன்னையின் மடியில் தவழும் பல்லுயிர் வளம் எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். ம...

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

Image
 இன்றைய இளைஞர்களுக்கு இந்தப் பதிவு வேடிக்கையான அதே சமயம் அர்த்தமற்றதாகக் கூட இருக்கலாம், ஏனென்றால் காலத்தின் வேகம் உயிருடன் இருக்கும் பெற்றோர்களை வணங்கவே அனுமதிப்பதில்லை இதில் எங்கு வாழ்ந்து இறந்த நாட்டார் தெய்வங்களை வணங்க அனுமதி தரப் போகி றது. ஆனால் நம்முள் எங்கோ ஒழிந்து கொண்டிருக்கும் ஓர் உணர்வு. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களின் நம்பிக்கையோடும்,கடவுள் இல்லை என்று சொல்பவர்களின் நம்பிக்கையோடும் விளையாடுவது எங்களின் நோக்கமும்,இந்தப் பதிவின் நோக்கமும் அல்ல. நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள். இந்த நிகழ்வு எவரொருவர் மனதையும் காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தோம்,இது மனதின் நம்பிக்கை சார்நத விசயமென்பதால்... சமயங்கள் தோன்றுவதற்கு முன் பார்ப்பன,பணக்கார சுவாமிகளை வழிபடும் வழக்கம் நம் மரபில் இல்லை. ஆனால் சங்க இலக்கிய காலத்தில் இருந்தே நாட்டார் தெய்வங்களை வழிபடும் முறை நம்மிடம் இருப்பதை சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. நம் முன்னோர் நடுகல் வழிபாடு கல்லை வணங்குவது விபரம் தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் விபர...

தடுப்பூசி - கொஞ்சம் யோசி

Image
என் நண்பன் ஒருவனுக்கு பிறந்த குழந்தையை காண மருத்துவமனை சென்றிருந்தேன். குழந்தை இந்த பூவுலகிற்கு வந்து இரண்டு நாள்தான் ஆகியிருக்கிறது. தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்கள் அழுது கொண்டே இருப்பதாக நண்பன் சொன்னான். ஏன் என்று விவரம் கேட்டதற்கு "ஒரே நாளில் குழந்தைக்கு மூன்று ஊசி போட்டார்கள்" என்றான். ஏதோ மெலிசான மூன்று முத்தம் கொடுத்தது போல...  நான் "நம்ம அம்மா, பாட்டி எல்லாம் ஊசிகள் போடலயே, நாம் ஏன் போடு றோம்னு" கேட்டேன். "அந்த காலத்து சாப்பாடு வேற இந்த காலத்து சாப்பாடு வேற" என்றார். அப்படியானால் நாம் மாற்ற வேண்டியது நம் உணவைத்தான். அதற்கு ஊசி தீர்வு ஆகாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்மை இந்த உலகத்திற்கு கொண்டு வந்ததும், வாழ வைப்பதும் இயற்கைதான். தடுப்பூசிகள் அல்ல. பல தலைமுறைகளாக எடுத்து வந்த நம் பாரம்பரிய மருத்துவத்தை பிற்போக்கானது என்று ஒதுக்கியதால், நம் மண்ணிற்கு சம்மந்தம் இல்லாத வேதி நச்சுகள் நிறைந்த மருத்துவத்தை கட்டி அழும் நிலைக்கு கொண்டு வந்திவிட்டது. ஐந்து வருடம் படித்து வரும் ஆங்கில மருத்துவரை நம்பும் நாம், ஐந்து தலைமுறைகளின்...

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

Image
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3வது "நம்ம வரலாறு" நிகழ்வு கடந்த 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை பாண்டி முனீஸ்வரன் கோவிலில் நடந்தது. இம்முறை நம்ம வரலாறு நிகழ்வில் "நாட்டார் தெய்வங்கள்" குறித்து எடுத்துரைக்கபட்டது. நம்ம வரல ாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக் மற்றும் சே. ஸ்ரீதர் நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டிக் முனீஸ்வரன் கோவில் இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேச தேர்வு செய்ததில் இருந்தே புரிந்துக் கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுபுற இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கென தன் வாழ்வை அர்பணித்த தமிழிசை அறிஞர் திரு. மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்பு பேச்சாளாராக அழைத்து கூடுதல் சிறப்பு. தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராக போராடி வரும் தோழர். முகிலன், வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன், இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருஷ்ணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. வ...

வானூர்தியும் வண்ண பறவைகளும்

Image
வானூர்தி (Aeroplane) தரையிரங்குவதையும் மேலேறுதையும்  வேடிக்கை பார்க்க, மதுரை - அருப்புகோட்டை சாலையில் எப்போதுமே மக்கள் கூட்டம் திரண்டு இருப்பதை அந்த பக்கம் போகிறவர்கள் பார்க்க முடியும்.  பனிக்கூழ் (Ice Cream) வண்டியும் அதன் பக்கத்தில் பனிக்கூழ் வேண்டி சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் காட்சியையும் பார்க்கலாம். வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளில் என்றாவது நாமும் ஒருவராக இருந்திருப்போம். காரணம் வேடிக்கை நம் தேசிய குணமாகியிருக்கிறது. தரையிறங்கும் வானூர்தி எந்த நிறுவனத்தை சேர்ந்தது, எங்கே செல்கிறது, எங்கிருந்து வருகிறது என்று தன் பிள்ளைகளுக்கு அத்தனை ஆசையோடு எடுத்து சொல்லும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். வானூர்தியை பார்க்கிற மக்களின் உற்சாக ஆசையால் பனிக்கூழ் விற்கும் தொழிலாளி பயனடைகிறார் என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சி தருகிறது. Times Of India 02.06.2014 அதே வழியில் மண்டேலா நகருக்கு அருகில் சாலையின்  இருபுறமும் அமைந்துள்ள கிளாக்குளம் கண்மாய்க்கு கூட்டம் கூட்டமாக சிறகடித்து வருகின்றன பறவைகள் பல. என்றாவது ஒருநாள் அவ்விடத்தில் நின்று அந்த பறவைகள...

சிறுமலைக் காடு ஒரு பயணம்

Image
Add caption காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, உடும்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள், தனக்கு, உசில், மருத மரம் என பல்லுயிர் பெருகிகிடக்கும் பசுஞ்சோலை சிறுமலைக் காடு. கடல் மட்டத்தில் இருந்து 1600 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள சிறுமலையில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. ஒன்று திண்டுக்கல் நோக்கி பாயும் சந்தானவர்த்தினி ஆறு. மற்றொன்று மதுரையை வாழ வைக்கும் சாத்தையாறு. ஆக சிறுமலைகாடு உயிர்ப்போடு இருந்தால்தான் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்கள் உயிர் வாழ முடியும். கோவை போன்ற நம் பிற நகரங்களில் பரவியுள்ள காடு குறித்த விழிப்புணர்வு மதுரை மக்களிடமும் ஏற்ப்பட வேண்டும். வறண்ட நிலமாகிப் போன மதுரையில் பல்லுயிர் பெருகி செழித்திருக்கும் காடுகள் இருக்கிறதா? என்று பலருக்கு வியப்பாக இருக்கும். அமெரிக்க நாட்டின் சிறப்புகளை அறிந்து வைத்திருப்பதா அறிவு? நம் ஊரின் பண்பாடு,  பெருமை, சிறப்பு, வளம் பற்றிய தெளிவான புரிதல்தானே உண்மையான அறிவு. ஒளிப்படம் - திரு.ந. இரவீந்திரன் சிறுமலை என்றால் பலர் திண்டுக்கல் மாவட்...

"உழவர்களைத் தேடி" 3வது நிகழ்வு - வத்திராயிருப்பு

Image
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் மதிப்புக்குரிய திரு. ச.முகேஷ், திரு. ப.பிச்சைமுருகன், திருமதி. இரா.செந்தமிழ் செல்வி, திரு. ந.கோபாலகிருஷ்ணன், திரு. நா.பெருமாள், திரு. கா.கருணாகரன், திரு. பா.சதாசிவராஜா, திரு. வே.இசைமணி, திரு.கு.மணி, திரு. பா.தமிழ்மணி, திரு. மு.தமிழ்செல்வன், திரு.கீர்த்திராஜன் இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும்  பெருமக்களில் ஒரு சிறு கூட்டம்.   நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள். நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மரு...

சிவரக்கோட்டை - அழியும் பசுமை சூழல்

Image
இந்த கிரமத்த, கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க... மதுரையில் உள்ள அழகிய கிராமங்கள், பல்லுயிர் சூழல் அழிய போகிறது. கடைசியா ஒருதரம் பார்த்துக்கோங்க.  "மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுக்கும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலங்கள் விவசாய நிலமாய் இல்லை என்ற அரசு நிர்வாக அதிகாரிகளின் கூற்றுகளை பல குழுக்கள் நேரடியாக கள ஆய்வு செய்து பொய் என்று நிரூபித்துள்ளன. கம்பு, வரகு, சோளம், பருத்தி, துவரை, மொச்சை, பச்சைப்பயிர், சுண்டல், ஓமம் போன்ற 30க்கும் மேற்பட்ட உணவுத்தானியப் பொருட்கள் தற்போதும் சாகுபடி செய்து வரும் இந்த பூமியில் நித்ய கல்யாணி, அவுரி போன்ற மூலிகைப் பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கரிசல்காளம்பட்டியில் சிவரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 1 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு அவரி மானியம், தேசிய மூலிகை பயிர் இயக்கம், மாவட்ட இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, ச...