சமயநல்லூர் மின்வாரிய வளாக மரங்களை வெட்டும் பணியை தடுக்க வலியுறுத்தி
சமயநல்லூர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காடு போல விளங்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட பழமையான மரங்களை வெட்டுவதற்கான குத்தகை விடப்பட்டுள்ளது. வெட்டப்படும் மரங்கள் அனைத்தும் மையிட்டு குறிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவ்வளாகத்தில் இருந்த பணியாளர் குடியிருப்பு முழுதும் இடித்து தரைமட்டாக்கப்பட்டு, பணியாளர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருக்கிறது. இன்னும் சில தினங்களில் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு துணை மின்நிலையம் அமைக்கும் பணி தீவிரப்படத்தப்படவிருக்கிறது. மதுரையில் வெப்பநிலையும், வறட்சியும் அதிகரித்து, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வரும் சூழலில் மரங்களை வெட்டும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல. வனக்கொள்கை 1988 ன்படி இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 33 சதவீதம் வனம் இருக்க வேண்டும். அவ்வகையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பு 18 சதவீதகமாகவும், மதுரையின் வனப்பரப்பு 11 சதவீதமாகவும் இருப்பதாக 2013 ஆம் ஆண்டு வனக்கணக்கெடுப்பு சொல்லுகிறது. அதுமட்டுமல்ல அரசியலமைப்பு சட்டம் 48(A) சுற்றுச்சூழலை பாதுகாப்பது அரசின், அரசு நிர்வாகங்களின் கடமை என வலிய...